Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள் மற்றும் 11 விமானப்படை தளங்களை அழித்தது இந்தியா!
India

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள் மற்றும் 11 விமானப்படை தளங்களை அழித்தது இந்தியா!

By MadushanMay 8, 2026

கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindhu) என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி, இந்த நடவடிக்கையின் முக்கிய வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லையில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டன. மேலும், பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் மற்றும் 13 போர் விமானங்கள் இந்தியப் படைகளால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. குறிப்பாக, ஒரு பாகிஸ்தான் ரேடார் விமானம் 300 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருக்கும்போதே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதேசமயம், இந்தியாவின் கட்டமைப்புக்கு எந்தவித பாதிப்பையும் பாகிஸ்தானால் ஏற்படுத்த முடியாமல் போனது," என்று அவர் விளக்கினார்.

தற்சார்பு இந்தியாவின் வலிமை:

ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் பேசுகையில், ‘தற்சார்பு இந்தியா’ என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது இந்தியாவின் உண்மையான ஆற்றலை நிரூபித்துள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்தியாவின் ஆயுதக் கட்டமைப்பில் கடாக் மற்றும் ஐஎஸ்ஆர் ட்ரோன்கள் உள்ளிட்ட 65 சதவீதத்திற்கும் அதிகமான உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு நீண்ட காலப் போராக மாறாமல், மிகக் குறுகிய காலத்தில் துல்லியமாக இலக்குகளை எட்டிய ஒரு கச்சிதமான நடவடிக்கையாகும்," என்றார்.

மேலும், இந்திய உளவுத்துறையின் துல்லியமான தகவல்கள் மற்றும் சைபர் பிரிவின் தகவல் மேலாண்மை ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. குறைந்த சேதங்களுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பாகிஸ்தானைப் போர் நிறுத்தக் கோரிக்கை விடுக்கும் நிலைக்குத் தள்ளியது. பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்ட இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’, எதிர்கால ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio