Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

Montreal நகரின் தெற்குப் பகுதியில் வீடுபுகுந்து திருடிய நான்கு பேர் கைது
Canada

Montreal நகரின் தெற்குப் பகுதியில் வீடுபுகுந்து திருடிய நான்கு பேர் கைது

By MadushanMay 14, 2026

Montreal நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Saint-Bruno-de-Montarville பகுதியில் வீடுபுகுந்து திருடியது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை மதியம் 12:30 மணியளவில் Cadieux Street இல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து Longueuil police (SPAL) துறையினருக்கு 911 அவசர அழைப்பு கிடைத்துள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் பல்வேறு பொருட்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறையினர், சம்பவ இடத்திலேயே 51 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் K9 unit மோப்ப நாய் பிரிவினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது Durham Street இல் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மற்ற மூன்று சந்தேக நபர்கள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் (security perimeter) அமைக்கப்பட்டது. அங்கு பதுங்கியிருந்த 34 மற்றும் 35 வயதுடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் விரைவாகக் கைது செய்தனர்.

இருப்பினும், 31 வயதுடைய நான்காவது நபர் பல மணிநேரமாகக் கட்டிடத்திற்குள்ளேயே பதுங்கியிருந்தார். இறுதியாக, காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் (gas) பயன்படுத்தி அவரை நிலை குலையச் செய்து கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மூடப்பட்டிருந்த சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி (targeted incident) நடத்தப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio